திகில் பேய் படமாக உருவாகிறது ‘வெள்ளிக்கிழமை 13ம் தேதி’. இதுபற்றி இயக்குனர் புகழ்மணி கூறும்போது,’சாத்தான்களுக்கு சந்தோஷமும், சகல சக்தியும் தரும் நாளாக வெள்ளிக்கிழமை 13ம் தேதி அமைகிறது. அந்த தேதியில் திருமணத்துக்கு தயாராக மணமகன் மண மேடை ஏறுகிறான். மணப்பெண் உருவத்தில் ரத்தவெறி பிடித்த பேய் வந்து நிற்கிறது. அந்த திருமணத்தை தடுப்பதற்காக மற்றொரு பேய் கூட்டம் புறப்படுகிறது. இதன் முடிவு என்ன என்பதுதான் கிளைமாக்ஸ். ரத்தன் மவுலி, சுஜாகுமார், ராம்ஜி, எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், சாம்ஸ், வையாபுரி, ரேகா, நிரோஷா, மதுமிதா ஆகியோருடன் டோலிவுட் ஹீரோயின் ஸ்ராவியா பேய் வேடத்தில் நடிக்கிறார். விக்ரம்குமார் தயாரிப்பு. தாஜ்நூர் இசை. கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு’ என்றார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No Comment to " தமிழில் பேயாக நடிக்கும் டோலிவுட் ஹீரோயின் "