முக்கிய செய்திகள்

புதுடில்லி:உலகின் மிகப்பெரிய ரயில்வே துறைகளில் ஒன்றான இந்திய ரயில்வே, ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கு, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, ஐரோப்பிய நாடான ஸ்பெயினைச் சேர்ந்த, 'டால்கோ' நிறுவனம் தயாரித்துள்ள ரயில், அதிகபட்சமாக மணிக்கு, 115 கி.மீ., வேகத்தில் இயக்கி, சோதிக்கப்பட்டது.
புதுடில்லி:உலகின் மிகப்பெரிய ரயில்வே துறைகளில் ஒன்றான இந்திய ரயில்வே, ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கு, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, ஐரோப்பிய நாடான ஸ்பெயினைச் சேர்ந்த, 'டால்கோ' நிறுவனம் தயாரித்துள்ள ரயில், அதிகபட்சமாக மணிக்கு, 115 கி.மீ., வேகத்தில் இயக்கி, சோதிக்கப்பட்டது.
சாதகமான அம்சங்கள்:இதற்காக, இந்த

மார்க்கத்தில், ரயில் பாதைகள் வலுப்படுத்தப்பட்டன; சிக்னல்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இதுபோன்ற சில மேம்பாட்டு பணிகளுக்குப் பின், இந்த ரயில் அறிமுகம் செய்யப்பட்டது.அதே நேரத்தில், தற்போது உள்ள ரயில் பாதைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யாமல், அதிவிரைவு ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. ரயில்களின் வேகத்தை உயர்த்துவதால், பயண நேரம் குறைவதுடன், எரிபொருள் சேமிப்பு உட்பட, பல்வேறு சாதகமான அம்சங்கள் உள்ளன.
அதன்படி, மத்திய அரசின் இந்த முயற்சிக்கு உதவ, ஸ்பெயினைச் சேர்ந்த, டால்கோநிறுவனம் முன்வந்துள்ளது. அந்த நிறுவனம் தயாரித்துள்ள, எடை குறைவான ரயில் இன்ஜின் மற்றும் ஒன்பது பெட்டிகள், இலவசமாக இந்திய ரயில்வேக்கு வழங்கப்பட்டு உள்ளன.
முதல்கட்டம்...இந்த ரயிலின் இயக்க செயல்பாடுகள் குறித்த முதற்கட்ட சோதனை நேற்று நடந்தது. உத்தர பிரதேச மாநிலத்தில், 90 கி.மீ., துாரமுள்ள பரேலி - மொராதாபாத் இடையே, இந்த ரயில் நேற்று இயக்கப்பட்டது. அதிகபட்சம், மணிக்கு, 115 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்ட இந்த ரயில், 70 நிமிடங்களில் பயண துாரத்தை கடந்தது.தற்போது, டில்லி - மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், சராசரியாக, மணிக்கு, 85 கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகிறது.

சிறப்பம்சம்:இந்த எடை குறைந்த டால்கோ ரயில் மூலம், பயண நேரம் வெகுவாக குறைகிறதுஎரிபொருள் தேவையில், 30 சதவீதம்
Advertisement
குறையும்வளைவுகளில் வேகத்தை குறைக்காமல்இயக்கலாம்இந்த ரயில் மூலம், டில்லி - மும்பை இடையேயான, பயண நேரம், 17 மணி நேரத்தில் இருந்து, 12 மணி நேரமாக குறையும்.
மூன்று கட்ட சோதனைகள்::பரேலி - மொராதாபாத் இடையே, டால்கோ ரயில், தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு இயக்கி சோதிக்கப்படும். காலியான பெட்டிகளுடனும், மணல் மூட்டைகள் நிரப்பப்பட்டும்,

இந்த ரயில் சோதித்து பார்க்கப்படும்.ரயிலின் வேகத்துக்கு முக்கியத்துவம் தரப்படும் அதே நேரத்தில், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், அலுப்பு இல்லாமல் பயணிகளுக்கு சொகுசான பயணம் கிடைப்பது குறித்தும்

இந்த சோதனை யின் போது முக்கியத்துவம் தரப்படும்.முதல் கட்ட சோதனையைத் தொடர்ந்து, மதுரா - பால்வால் இடையே, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் பாதையில், டால்கோ ரயில் சோதித்து பார்க்கப்படும். அதிகபட்சம், மணிக்கு, 180 கி.மீ., வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுஉள்ளது. அங்கு தொடர்ந்து, 40 நாட்களுக்கு இந்த சோதனை நடக்கும்.
அதைத் தொடர்ந்து, டில்லி - மும்பை இடையே மூன்றாம் கட்ட சோதனை, இரு வாரங்களுக்கு நடக்கும்.இதுபோன்று, மேலும் மூன்று சோதனை ஓட்டங்கள் நடத்தப்படும்.

அதன் பின், இந்த ரயிலின் செயல்பாடு குறித்து முடிவு செய்யப்படும். முதல் சோதனை ஓட்டம், மிகவும் சொகுசாக இருந்தது.- ரயில்வே அதிகாரிகள்

Tags:

No Comment to " அதிவேக ரயில்களை இயக்கும் ரயில்வே முயற்சி 'டால்கோ' ரயிலை 115 கி.மீ., வேகத்தில் இயக்கி சோதனை "