முக்கிய செய்திகள்

வாஷிங்டன்,

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 'நேஷனல் ஸ்பெல்லிங் பீ' போட்டி நடந்து வருகிறது. ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான எழுத்துக்களை கூறும் இந்த போட்டியில் பள்ளிச் சிறுவர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான போட்டி சற்று கடினமாகவே இருந்தது. இருந்தபோதிலும், சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய ஜெய்ராம் ஜகதீஷ் ஹாத்வார் (13), நிகார் சாய்ரெட்டி ஜங்கா (11) ஆகிய 2 இந்திய வம்சாவளி பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றிருப்பது இந்தியாவிற்கு பெருமையை தேடித்தந்துள்ளது. இப்போட்டியில், வெற்றி பெற்றவர்களின் இறுதிப்பட்டியலில் 10 பேரில் 7 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவர்களாவர்.  

Tags:

No Comment to " அமெரிக்காவில் நடந்த 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் 2 இந்திய சிறுவர்கள் சாம்பியன் "