முக்கிய செய்திகள்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததில், மதுரையைச் சேர்ந்த 2 மாணவர்கள் உயிரிழந்தனர். 44 பேர் காயமடைந்தனர்.
மதுரை அருகே அச்சம்பத்தில் உள்ள தனியார் அமைப்பின் மூலம் பாலகிருஷ்ணன் என்பவர் தலைமையில் 63 மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை பேருந்து ஒன்றி பெரியகுளம் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களைப் பார்வையிடச் சென்றனர். அவர்கள் மஞ்சளாறு அணை, கும்பக்கரை அருவி மற்றும் சோத்துப்பாறையைப் பார்வையிட்ட பின்னர், மாலையில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, சோத்துப்பாறை அருகே சென்றபோது உயர்அழுத்த மின் கம்பியில் சிக்கி இருந்த தென்னைமட்டை உரசியதில், பேருந்து முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த அச்சம்பத்தைச் சேர்ந்த முகேஷ் (15) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக்செல்வம் (18) உள்ளிட்ட 44 பேர் காயமடைந்தனர். உடனே இவர்களை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதில் முகேஷும், கார்த்திக்செல்வமும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயமடைந்த அஜய்பிரகாஷ், கிஷோர், மதியரசு, பாண்டி, கார்த்திகேயன், முத்துக்குமார், சதீஸ்குமார் ஆகிய 7 பேர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் 37 பேர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Tags:

No Comment to " பேருந்தில் மின்சாரம் பாய்ந்து 2 மாணவர்கள் சாவு:4 பேர் காயம் "