நாகப்பட்டினம் மாவட்டத்தில்
வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் இ- சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமை
செயல்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பது:
பொதுமக்களின் நலன் கருதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து
வட்டாட்சியர் அலுவலங்களிலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால்
நிர்வகிக்கப்படும் அரசு இ-சேவை மையங்கள் வழக்கம் போல் செயல்படும்.
அதேபோல் பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற
மாணவர்களுக்கு தேவையான வருவாய்த்துறைச் சான்றுகளைப் பெற அந்தந்தப்
பகுதிகளில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் பொது சேவை
மையங்களும் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் செயல்படும் எனக் கூறியுள்ளார்.
No Comment to " வட்டாட்சியர் அலுவலகங்களில் இ- சேவை மையங்கள் இன்று செயல்படும் "