முக்கிய செய்திகள்

கத்தரி வெயில் நிறைவடைந்தாலும், அதன் தாக்கம் இரண்டு நாளைக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடுமையான வெயில் தொடர்வதையொட்டி பள்ளிகள் திறக்கப்படும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மே மாதம் 4 ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயிலால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பம் வாட்டி வதைத்தது. குறிப்பாக, சென்னை, வேலூர் போன்ற முக்கிய நகரங்களில் நூறு டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவானது.  வெப்பத்தின் தாக்கத்தால் குழந்தைகளும், வயதானவர்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். 


மேலும் வெப்பம் அதிகரிக்க கூடும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பால் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் நாள் ஜூன் 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால்,  ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெயில் காரணமாக சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சற்று தாமதமாக பள்ளிகளை திறக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:

No Comment to " கடுமையான வெயில் தொடர்வதால் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க "